states

புதுச்சேரியில் காவலர் தேர்வுக்கு உடல் தகுதி தேர்வு

புதுச்சேரி,ஜன.8- புதுச்சேரி காவலர் பணி க்கான உடல் தகுதி தேர்வு 20 நாட்கள் நடைபெறுகிறது. புதுச்சேரியில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அனு மதிச்சீட்டு ஜன.9 முதல் ஆன்லை னில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காவல்துறை அதிகாரி அறி வித்துள்ளார். புதுச்சேரி காவல் துறை இயக்குநர் மிலிந்த் தும்ரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி காவல்துறை யில் காலியாக உள்ள 390 காவலர்,12ரேடியோ டெக்னீ சியன், 29  டெக்ஹேண்டலர்  ஆகிய பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ண ப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக மொத்தம் 17,227 பேர் விண்ணப்பித்து இருந்த னர். இதில் காவலர் பணிக்கு 13,970, ரேடியோ டெக்னீஷியன் 229, டெக்ஹேண்ட்லர் 558 என 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட் டன. 2,440 விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டன. காவலர் பணியிடங்க ளுக்கு விண்ணப்பித்த தகுதி யான விண்ணப்ப தாரர்க ளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு வருகிற 19 ஆம் தேதி காலை 6 மணிக்கு கோரி மேடு காவலர் பயிற்சி மைதானத் தில் தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது.  

நாள் ஒன்றுக்கு 750 பேர் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த தேர்வு காலை 6, 8, 10 மணி என 3 பிரிவுகளாக நடைபெறும்.  பரிசோதனை கொரோனா பெருந்தோற்று காலம் என்ப தால் தேர்வுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசி னிகளை கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்.டி.பி.சி. ஆர். பரி சோதனை செய்ததற்கான சான்று கொண்டு வரவேண்டும். கொரோனா தொற்று யாருக்காவது உறுதி செய்ய ப்பட்டால் அவர்களுக்கு  மாற்று ஏற்பாடு செய்ய ப்படும். தேர்வு நடக்கும் மைதானத்தில் குடிநீர், கழிப்பறை, முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இதில் ஏதாவது சந்தே கங்கள் இருந்தால் பணி நாட் களில் 0413-2277900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு தெரிவித்தார்.