states

img

பீகாரில் தலித் சிறுமி படுகொலையை கண்டித்து பெண்கள் போராட்டம்

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் பாகல்பூரில் கடந்த ஜூன் 16 அன்று தலித் சிறுமி காஜல் தேவி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை அரங்கேறி ஒருவாரம் கடந்துள்ள நிலையில் போலீசார் இன்னும் துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தலித் சிறுமியின் படுகொலையை கண்டித்தும், குற்றாவளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் பாகல்பூரில் உள்ள தீப் நகரிலிருந்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.