பீகாரில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 32 வயதான ஜனதா தளம் உறுப்பினர் கலீல் ஆலம் ரிஸ்வி என்பவரை பசு காவலர்கள் என்ற பெயரில் செயல்படும் இந்துத்துவ கும்பல்களால் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், குறைந்தது இரண்டு நபர்கள் கலீலை கரும்புகளால் அடித்து, முடியைப் பிடித்து இழுத்து, எவ்வளவு மாட்டிறைச்சி சாப்பிட்டீர்கள், யார் "கௌ மாதா"வை அறுத்தார்கள் என்று கேட்கிறார்கள்.
கலீல், மூத்த ஜேடியூ தலைவரும் பீகார் கல்வி அமைச்சருமான விஜய் குமார் சவுத்ரிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கலீலை தாக்கும் வீடியோவில் காணப்பட்டவர்களில் கிருஷ்ண குமார் ஜா என்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரை தானும் மற்றவர்களும் அடித்ததாக ஜா ஒப்புக்கொண்டார், ஆனால் அவரைக் கொல்லவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கலீல் அகமதுவைக் கொன்ற நபர்களால் வீடியோ படம் எடுக்கப்பட்டதாக சமஸ்திபூர் காவல்துறை கண்காணிப்பாளர் காவல் கண்காணிப்பாளர் ஹிருதய் காந்த் தெரிவித்தார்.
சமஸ்திபூரில் உள்ள முஸ்ரிகராரியில் வசிக்கும் கலீல் என்பவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பிப்ரவரி 16-ம் தேதி காய்கறிகள் வாங்க வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பிப்ரவரி 18 அன்று, கலீலின் எரிந்த உடல் புர்ஹி கந்தக் ஆற்றின் கரையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு, அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலானது, ஜனதா தளம் உறுப்பினரை ஒரு குழுவினர் சூழ்ந்து கொண்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டதற்காக கலீலை தாக்குகிறது.
இந்த காணொளி அனுராக் ஜா என்ற இளைஞரின் இன்ஸ்டாகிராம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனுராக் ஜா மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஹிருதய் காந்த் கூறுகையில்,
"இந்த வீடியோ பிப்ரவரி 19 அன்று எங்கள் கவனத்திற்கு வந்தது. அதில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் இருந்தன. கலீல் கொல்லப்படுவதற்கு முன் வீடியோ எடுக்கப்பட்டது. இது அனுராக் ஜாவின் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதை தொடந்து நாங்கள் சோதனைகளை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளோம், ”என்று ஹிருதய் காந்த் கூறினார்.
தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களை, விற்பவர்களை படுகொலை செய்து வந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணி அரசாங்கம் இருக்கும் பீகார் மாநிலத்திலும் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.