states

img

பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் சம்பவம் மீண்டும் வினாத்தாள் கசிவு

பாட்னா பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் அரசு போட்டித் தேர்வு களில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக “குரூப் 1” (துணை ஆட்சியர், தாசில் தார், வட்டாட்சியர்) நடத்தப்படு வது போல, பீகார் மாநிலத்தில் அம் மாநில அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் (பிபிஎஸ்சி) சிசிஇ என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

2,035 காலியிடங்களை கொண்ட இந்த பிபிஎஸ்சி - சிசிஇ தேர்வின், முதல்நிலைத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 912 மையங்களில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான தேர்வாளர்கள் பிபிஎஸ்சி - சிசிஇ தேர்வை எழுதினர். 

பாஜக - நிதிஷ் கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிவு என்பது வழக்கமானது ஆகும். இத்தகைய சூழலில் பிபி எஸ்சி - சிசிஇ தேர்வின் வினாத் தாள் கசிந்தன. பிபிஎஸ்சி - சிசிஇ தேர்வு முடிந்த உடன் 400க்கும் மேற் பட்ட தேர்வாளர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் வினாத் தாள் கசிந்ததாக காவல்துறையில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மீண்டும் அரசு மழுப்பல்

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கும்ராரில் உள்ள பாபு தேர்வு  மையத்தில் வினாத்தாள் கசிவை  அம்பலப்படுத்தி தேர்வை புறக்க ணித்தனர். மேலும் தேர்வை புறக் கணித்தவர்கள் காவல்துறையில் வினாத்தாள் கசிவு தொடர்பான ஆதாரத்தை அளித்து போராட்டத்தி லும் ஈடுபட்டனர். ஆனால் வழக்கம் போல பீகார் பாஜக கூட்டணி அரசு வினாத்தாள் கசியவில்லை என கூறி திசை திருப்பும் வேலை யில் ஈடுபட்டு வருகிறது.

உண்மையை ஒப்புக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

அரசு வினாத்தாள் கசிய வில்லை என பீகார் அரசு கூறி வரும் சூழலில், வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னா மாவட்ட ஆட்சி யர் சந்திரசேகர் சிங் பிபிஎஸ்சி தேர்வு நடைபெற்ற மையங்களில் சோதனை நடத்திய பின் வினாத் தாள் கசிந்தது உண்மை தான் என போட்டுடைத்துள்ளார். இதுதொ டர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,”கும்ரார் தேர்வு மையத்தில் தேர்வாளர்கள் இருக்கைக்கு ஏற்ப 272 வினாத் தாள்கள் அனுப்பப்பட்டு இருந்தன. ஆனால் வினாத்தாள் பெட்டியில் 192 வினாத்தாள்கள் மட்டுமே இருந்தன. அதே போல தேர்வு கண்காணிப்பாளர்களிடமிருந்து ஒரு கும்பல் வினாத்தாள்களை பறித்துச் சென்றுள்ளது. இதன் மூலமாகவே வினாத்தாள் கசிந்துள் ளது. இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

பிபிஎஸ்சி தலைவரும் ஒப்புதல்

பிபிஎஸ்சி தலைவர் பர்மர் ரவி மனுபாய் கூறுகையில்,”பிபிஎஸ்சி- சிசிஇ-யின் 70ஆவது முதல் நிலைத் தேர்வு மதியம் முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே கட்ட மாக நடைபெற்றது. மாநிலம் முழு வதும் 912 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அவற்றில் 911 மையங்களில் மட்டுமே சரியான முறையில் தேர்வு நடைபெற்றது” என வினாத்தாள் கசிவை ஒப்புக் கொண்டுள்ளார்.

உ.பி.,யைப் போல பீகாரிலும்  போராட்டம் வெடிக்க வாய்ப்பு

சமீபத்தில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணிக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேர்வாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதே போல பீகார் மாநிலத்திலும் தேர்வாளர்கள் போராட்டம்நடத்துவோம் என மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். “வினாத்தாள் கசிவு காரணமாக முதல்நிலை தேர்வை மீண்டும் பீகார் அரசு நடத்த வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என தேர்வாளர்கள் எச்சரித்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.