states

39 எம்எல்ஏக்களில் 9 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு ஓட்டம்

தெலுங்கானாவை இரண்டு முறை ஆட்சி செய்த சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி (பிஆர்எஸ்) கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்து காங்கிரஸ் கட்சி யிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்த முள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலை யில், பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், சந்திரசேகரராவின் காயம், கவிதா கைது, ராமராவின் தலைமறைவு போன்ற சம்பவங்களால் வலுவான எதிர்க் கட்சி போன்று செயல்படாத சூழலை சந்தித்தது பிஆர்எஸ். இதனால் சோர் வடைந்த பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர் கதையாக உள்ளது. ஏற்கெனவே 8 பிஆர்எஸ் எம்எல் ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், சனியன்று செரிலிங்கம்பள்ளி தொகுதி பிஆர்எஸ் எம்எல்ஏ அரிகேபுடி காந்தி தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதன்மூலம் தெலுங்கானா சட்டமன் றத்தில் ஆளுங்கட்சியின் பலம் 74 ஆக (காங்கிரஸ் - 64, பிஆர்எஸ் - 9, சிபிஐ - 1) உயர்ந்துள்ளது.

சிதறும் அபாயம்...

காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 9 எம்எல் ஏக்களில் 6 பேர் பிஆர்எஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணையும் பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் பிரம்மாண்ட கூட்டத்துடனும், கவுன்சிலர்களுடனும் ஐக்கியமாகி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பிஆர்எஸ் கட்சி மாநிலத்தின் பல பகுதிகளில் கூண்டோடு காணாமல் போயுள்ளது. தற்போது பிஆர்எஸ் எம்எல்ஏக்களின் பலம் 29 ஆக குறைந்துள்ள நிலையில், மேலும் 12 எம் எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் அரங்கேறினால் பிஆர்எஸ் பாதி யாகும் சூழல் ஏற்படும்.