சென்னை, ஜூன் 13- ரூ.75.96 கோடியில் தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாநில அரசு டெல்டா மாவட்டங்க ளில் குறுவை நெல் சாகுபடிக்கு ரூ. 75.96 கோடியில் 5 லட்சம் ஏக்கருக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அறி வித்துள்ளதும், குறுவை தொகுப்பு திட்டத் தில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கி.கி, டிஏபி 50 கி.கி , பொட் டாஷ் 25 கி.கி மற்றும் 50 சதவீத மானி யத்தில் ஏக்கருக்கு 20 கிலோ விதை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
முன்னதாக குறுவை சாகுபடி பணிகள் துவங்குவதற்கு முன்பாக மாநில அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணி களை மேற்கொண்டது. முதலமைச்சரே நேரில் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேட்டூர் அணையில் 103 அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், திட்ட மிட்டவாறு ஜூன் 12 அன்றே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ஏக்கருக்கு ரூ. 75.96 கோடியில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துக! விவசாயிகளுக்கு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் சாகுபடி செலவிற்கு தேவையான பயிர்க்கடன் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை மாநில அரசே செயல்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.