அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை புகுத்தி கடுமையான உழைப்பு சுரண்டலை ஊக்குவித்த நவீன தாராளமயம் தற்போது ராணுவத்தையும் விட்டு வைக்க வில்லை. கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக் கான அடிப்படைக் காரணம் என்பது அப் போரில் ஈடுபட்ட வீரர்களில் பெரும்பாலான வர்கள் இளம் வயதினரே ஆவர். எனவே இளமைத் துடிப்பும், வேகமும் கொண்ட வீரர்களே நமது ராணுவத்திற்கு தேவை என கார்கில் போருக்கு பிறகு அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் பேரில் தான் அக்னிபாத் எனும் திட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதுவொரு ‘பைலட்’ (பரிசோ தனை) திட்டமே; எனவே இதற்கு எதிர்ப்பு அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்ச ரும் அதிகாரிகளும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பைலட் எனும் பெயரால் அறிவிக்கப் பட்டுள்ள இத்திட்டம் உண்மையில் பல அபத்தங்களையும், ஆபத்துக்களையும் கொண்டதாகவே உள்ளது. H ஒப்பந்த அடிப்படையில் தற்போது வேலைக்கு எடுக்கப்படும் அக்னி வீரர்களில் 75 % பேர் நான்காண்டுகளுக்கு பிறகு வேலையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்ப டையில் தான் பணி நீடிப்பு வழங்கப்படும். அது என்ன தகுதி என்பது தெளிவாக குறிப்பி டப்படவில்லை.
H நான்காண்டுகளுக்கு பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படும் அக்னி வீரர்களு க்கு ஓய்வூதியமோ, பணிக்கொடையோ அளிக்கப்பட மாட்டாது. அக்னிபாத் திட்டத் தின் படி அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியாது என்பதால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட் டின்படி அவர்களால் வேறு வேலைகளுக்கும் கூட விண்ணப்பிக்க முடியாது. அப்படியெ னில் ராணுவத்தில் பணியாற்றும் போது ஒப்பந்த ஊழியர்களாகவும், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வேலையற்றவர்க ளாகவும் அக்னி வீரர்கள் இருப்பார்கள் என்பதே யதார்த்தம்.
H நான்காண்டுகளுக்கு பிறகு பணியி லிருந்து விடுவிக்கப்படும் அக்னி வீரர்க ளுக்கு ரூ.11.71 இலட்சம் சேவா நிதி என ஒரு தொகுப்பு நிதி உதவி அளிக்கப்படும். அதை வைத்து அவர்கள் ஏதேனும் ஒரு தொழிலை (?) நடத்தி பிழைத்துக் கொள்ளலாமாம். தேவையெனில் அவர்களுக்கு வங்கி கடனுக் கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு க்கு இரண்டு கோடி பேருக்கு வேலை, பதி னைந்து லட்சம் எனும் வரிசையில் இதுவும் ஒரு வெற்று வாக்குறுதியே என்பதை தவிர இதில் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
H பள்ளி கல்லூரி படிப்புகளை முடித்து விட்டு ராணுவப்பணியில் சேர்வ தற்காக தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பல்லா யிரக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே இருபத்து மூன்று வயதை கடந்து விட்ட வர்கள் என்பதால் இவர்களுக்கு அக்னி திட்டத்தின் படி ராணுவப் பணிகளில் சேர வும் முடியாது என்பதோடு அவர்களுக்கான நிரந்தர பணி வாய்ப்பும் முற்றிலும் முடக்கப் பட்டு விட்டது. மேற்கண்ட அம்சங்களை கொண்டு பார்க்கிற போது ஒன்றிய அரசால் “பைலட் திட்டம்” என அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் உண்மையில் சயனைட் தடவிய திட்டமே ஆகும்.
போலி தேசபக்தர்களின் “தேசத்துரோகம்”
தற்போதைய ராணுவ செலவினங்க ளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 80% அளவு அவர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதி யங்களுக்கே போயிவிடுகிறதாம். மீதமுள்ள வெறும் 20% நிதியை கொண்டு ராணுவத்தை நவீனப்படுத்த முடியவில்லையாம். ஆகவே தான் அத்தக்கூலியில் ஒப்பந்த தொழிலா ளர்களை பணியில் அமர்த்தி ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகளை குறைக்க போகிறார் களாம். உண்மையில் ராணுவத்தை நவீனப் படுத்துவதென்பதும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதென்பதும் ராணுவ வீரர்க ளையும் உள்ளடக்கியதொரு அம்சமே ஆகும். வெறும் இயந்திரங்களை மட்டும் நவீனப் படுத்தி விட்டு வீரர்களை தெருவிற்கு தள்ளி விடுவதுதான் பாஜக சொல்லும் தேச பக்தியா?
மற்றொரு அரிதான கண்டுபிடிப்பையும் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. நான்காண் டுகள் ராணுவச் சீருடை அணிந்து தேசத்திற் காக உழைத்தவர்கள் அதற்கு பிறகு வேலை யில்லை என்ற நிலையில் விரக்தி அடைந்தா லும் கூட யாரும் தீவிரவாத அல்லது பிரி வினைவாத அமைப்புகளுக்கு பின்னால் போக மாட்டார்களாம். ஏனெனில் இந்த நான்கு ஆண்டுகளில் அவர்களுக்குள் தேச பக்தி பெருமளவும் வளர்ந்திருக்குமாம். அடடா, நமது பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச் சர்களின் மூளையை நினைத்தால் அப்படியே புல்லரிக்கிறது. சரி அப்படியே அவர்கள் தேச பக்தர்களாக மாறி, பிரிவினைவாத அமைப்பு களுக்கு பின்னால் செல்லமாட்டார்கள் என்பது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களை பாதுகாக்காமல் பட்டினி போடு வது தான் ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அழகா? அரசாங்கத்தின் கூற்றுப்படி வேலை யில்லாதவர்கள் எனினும் அவர்கள் தேச பக்தர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசு அவர்களுக்கு சோறு போடாமல் பட்டினி யில் தள்ளினாலும் கூட ஈரத்துணியை வயிற்றில் கட்டிக் கொண்டே “பாரத் மாதா கீ ஜே” என கூவ வேண்டும் போலும்!