மும்பை, ஆக. 5 - எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலை நகர் பாட்னாவில் ஜூன் 23 அன்றும், இரண்டா வது கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதி களிலும் நடைபெற்றது. இரண்டாவது கூட்டத்தில் 26 கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (I-N-D-I-A) கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு ‘இந்தியா’ கூட்டணி என பெயர் சூட்டப்பட்ட பின், எதிர்க்கட்சிகளின் 3-ஆவது ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடை பெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிவசேனா (உத்தவ் பால சாஹேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறு கையில், “’இந்தியா’ கூட்டணியின் ஆலோ சனைக் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மும்பையில் நடைபெறும். கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறோம்” என்று அறிவித்துள்ளார்.