90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ் கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. முதல் கட்டமாக நக்சல்கள் நிறைந்த பகுதியாக உள்ள 20 தொகுதி களுக்கு பலத்த பாதுகாப்புடன் செவ்வா யன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலை யில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17 அன்று வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இந்நிலையில், தண்டேவாடா தொகு திக்குட்பட்ட கரிகுண்டம் கிராம மக்கள் 23 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த பாது காப்புடன் வாக்களித்துள்ளனர். பழங்குடி யினத்தைச் சேர்ந்த 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கரிகுண்டம் கிராமம் நக்சல்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் அடிக்கடி சிக்கும் பகுதியாக இருப்பதா லும், வாக்குச்சாவடி மற்றும் மக்களிடம் தேர்தல் தொடர்பான அறிவிப்பைக்கூட வெளியிட முடியாத சூழல் இருந்தது. இம்முறை ஆளும் மாநில அரசு முன் கூட்டியே கரிகுண்டம் கிராம மக்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அங்கு பாதுகாப்பை பலப் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.