states

கோவாக்சின் மூலம் கிடைத்த ராயல்டி ரூ.171.74 கோடி

புதுதில்லி, பிப்.8- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்  கோவாக்சின் கொரோனா தடுப்பூசி விற்பனையின் மூலம் பாரத் பயோடெக் நிறு வனத்திடமிருந்து 2022 ஜன வரி 31 வரை ரூ.171.74 கோடி ராயல்டியைப் பெற்றுள்ளது. ஆராய்சிக் கவுன்சில் கோவாக்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சுமார் ரூ.35 கோடி செலவிட்டுள்ளது. ராயல்டியாக பெறப்படும் நிதி, வளர்ந்து வரும் ஆராய்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஆராய்ச்சி திறன் மேம்பாடு உள்ளிட்ட சுகா தார ஆராய்ச்சி நடவடிக்கை களுக்குப் பயன்படுத்தப்படு வதாக காங்கிரஸ் உறுப்பி னர் மல்லிகார்ஜூன கார்கே  நாடாளுமன்றத்தில் எழுப் பிய கேள்விக்கு ஒன்றிய சுகா தார அமைச்சர் மன்சுக் மண்ட வியா தெரிவித்தார்.