மோடி அரசாங்கம் இந்திய பொருளாதாரத்தை சிதைத்துள்ளது. ஜி.டி.பி. முந்தைய ஆண்டின் மைனஸ் 6 சதவீதம் எனும் அடித்தளத்திலிருந்து 2021-22ல் 8.7 சதவீதம் வளர்ச்சி. அதாவது 2020-21ல் 145.16 லட்சம் கோடி. 2021- 22ல் 147.35 லட்சம் கோடி. வளர்ச்சி வெறும் 1.5 சதவீதம்தான்! தேசத்தின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள். பொது முதலீடுகளை அதிகரியுங்கள். வேலை வாய்ப்பை பெருக்குங்கள். பொருட்கள் கொள்முதல் தேவையை அதிகரியுங்கள். அதுவே பொருளாதாரத்தை சீர்படுத்த உதவும்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை பிஎப் அமைப்பு குறைத்ததை நிதி அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் மிகவும் குறைவான இது, வட்டிவிகிதத்தில் வெட்டு என்பது மட்டுமல்ல! இந்திய உழைப்பாளியின் சராசரி சேமிப்பின் மீது தாக்குதலும் ஆகும். எல்ஐசி தனியார்மயம் நட்டத்தை விளைவித்துள்ளது. தறிகெட்டு அதிகரிக்கும் விலைவாசி/வேலையின்மை ஆகியவற்றுடன் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் வெட்டு என்பது கொடூரமானது. இந்த அரசாங்கத்தின் பெரிய கார்ப்பரேட்டுகள் பற்றிய மட்டுமே உள்ள கவலை 99 சதவீதமான இந்திய மக்களுக்கு மிகப்பெரும் வலியை கொடுக்கிறது.
71 சதவீதம் இந்தியர்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வசதி இல்லை. ஊட்டச்சத்து உணவு இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர் என்று செய்தி விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 327 சதவீதம் உயர்வு. உணவுப் பொருட்களும் அடங்கிய நுகர்வு விலை குறியீடு 84 சதவீதம் அதிகரிப்பு. என்னதான் மோடி அரசாங்கம் பொய்களும் வாய்ப்பந்தலும் போட்டாலும் அதன் கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது எனும் உண்மையை மறைக்க இயலாது.
https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury