states

img

ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து: மழை நீர் தேங்கியுள்ளதாம்!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ராஜ்பவனில் ஆர்.என்.ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை எச்சரிக்கை மற்றும் தேநீர் விருந்து நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக  ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.