states

அரசு பதிலளிக்க நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் முகம்மது ஜூபைருக்கு ஜாமீன் நீட்டிப்பு!

புதுதில்லி, ஜூலை 12 - ‘ஆல்ட் நியூஸ்’  இணையதள பத்திரிகை யின் இணை நிறுவனர் முகம்மது ஜூபை ருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால நிபந்தனை ஜாமீனை, உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. எனினும், வேறு சில வழக்குகளில் ஜாமீன் பெறாததால், ஜூபைர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார். செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு போலிச் செய்தி களை அம்பலப்படுத்தும் ஊடகம் ‘ஆல்ட் நியூஸ்’. இதன் இணை நிறுவனர், முகம்மது ஜூபைர். இவர், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக உ.பி. மாநிலம் சீதாபூர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த  வழக்கில், முகம்மது ஜூபைருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 8 அன்று 5 நாட் களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி யிருந்தது. வழக்கு தொடர்பாக டுவிட்டரில் புதிதாக எந்தக் கருத்துக்களையும் பதி விடக் கூடாது; உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் நீதிமன்ற எல்லைப் பகுதியை விட்டு  வெளியே செல்லக்கூடாது என்று அந்த நிபந்தனையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு ஜூபைரின் ஜாமீன் கோரும் வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜூபைருக்கு எதிரான  வழக்கில், “பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோருகிறது. அந்த வகையில், அரசுக்கு 4 வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. அதுவரை சீதாப்பூர் வழக்கில் ஜூபைருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மறு  உத்தரவு வரும் வரை தொடரும். செப்டம்பர்  7-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று நீதி பதிகள் தீர்ப்பளித்தனர்.