states

img

இருசக்கர வாகன விபத்துகளில் தமிழகம் முதலிடம்: 8,529 பேர் இறப்பு

சென்னை, ஆக. 31- தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான குற்ற விவரங்கள் தொடர் பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில்  கடந்த ஆண்டில் நாடு முழு வதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622  பேர் மரணம் அடைந்துள்ள னர் என்றும் அவற்றில் இரு சக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதி கம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இரு சக்கர சாலை விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் இறந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து  மரணங்களில் 44.5 விழுக் காடாகும். இருசக்கர வாகன விபத்துகளால் நிகழ்ந்த  உயிரிழப்புகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரத்து 259 பேர் இறந்துள்ளனர். 7,429 மரணங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் 2ஆவது இடத்தில் உள்ளது. கார் விபத்து மரணங் களை பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. லாரி விபத்து மரணங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடத் தில் உள்ளது. பேருந்து விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் 1,337 இறப்பு களுடன் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், 551 இறப்புகளுடன் தமிழ்நாடு 2ஆவது இடத்திலும் உள்ளன.

அதேபோல், மாலை 6  மணி முதல் இரவு 9 மணி  வரைதான் அதிகமான விபத்துகள் நிகழ்ந்துள்ள தாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழ் நாட்டில்தான் அதிக விபத்து நிகழ்ந்துள்ளது. அதேபோல் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தேசிய நெடுஞ் சாலைகளில் நிகழ்ந்த விபத் துகளால் ஏற்பட்ட மரணங் களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், தமிழ்நாடு 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல், கடந்த  ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் நடந்துள்ளன. இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 979 பேர். பெண் கள் 45 ஆயிரத்து 26 பேர்.  தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 23,178  பேர் குடும்பத் தலைவிகள் ஆவர். இதில், 3 ஆயிரத்து 221 குடும்ப தலைவிகள் தற்கொலையுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஆண்களில், தினக்கூலி தொழிலாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்.