states

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்கிடுக!

புதுதில்லி,ஜன.20- கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 ஆயி ரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு  உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  இழப்பீடு வழங்குவதில் மாநில  அரசுகள் தாமதம் செய்து வருவதற்கு கண்டனம்  தெரிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி  மூலம் வழங்கப்படும் என்றும் அந்த குழந்தை களுக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அது போல கொரோனா தொற்றுக்கு பலியானவர் களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் கெளரவு குமார் பன்சால் என்பவர் தொடர்ந்த வழக்கு  தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கில்,  தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்த கடந்த ஏப்ரல் 1, 2020 முதல் ஜனவரி 11,2022 வரையிலான தகவலின்படி இந்தியாவில்  ‘1 லட்சத்து 36 ஆயிரத்து 910 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்; 10,094 குழந்தைகள் ஆதரவற்றுள்ளனர்; 488 குழந்தை கள் கைவிடப்பட்டுள்ளனர். இப்படியாக மொத்த முள்ள 1 லட்சத்து 47 ஆயிரத்து 492 குழந்தை களில் 76,508 ஆண் குழந்தைகளும், 70,980 பெண் குழந்தைகளும், 4 பிற பாலினத்தை சேர்ந்த குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களில் அதிகபட்ச குழந்தைகள் (துல்லிய மாக 1,25,205 பேர்), ஒரு பெற்றோரை இழந்து – மற்றொரு பெற்றோரின் ஆதரவின் கீழ் வாழ்கின்றனர். இன்னும் 11,272 குழந்தைகள் பெற்றோரின்றி குடும்ப உறுப்பினர்கள் யாருட னாவது வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 8,450 குழந்தை கள் பாதுகாவலரின் கண்காணிப்பின் கீழ் வாழ்கின்றனர். பெற்றோரை இழந்திருக்கும் இந்தக் குழந்தைகள் பட்டியலில் 8 முதல் 13 வய துடைய குழந்தைகள் 59,010 பேர்; 14 முதல் 15 வய துடைய குழந்தைகள் 22,763 பேர்; 16 முதல் 18  வயதுடைய குழந்தைகள் 22,626 பேர்; 26,080 பேர் 4 முதல் 7 வயதுடையவர்களாக உள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம்,  கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை, பஞ்சாப்,கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா் களுக்கே வழங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக் கது. கொரோனா உயிரிழப்பு குறித்து சரியாக  ஆய்வு செய்து இழப்பீட்டை வழங்கவேண்டும்.ஆதார் அட்டை, செல்ஃபோன் எண் ஆகிய வற்றை பயன்படுத்தி உடனடியாக இழப்பீடு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று உத்தரவிட்டது. 

மேலும்,  தேசிய குழந்தை உரிமைகள் பாது காப்பு ஆணையத்தின் தகவலின்படி, கொரோனா  பரவத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம்  சிறார்கள் அனாதை களாகி உள்ளனர். இவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கொரோனா  தொற்று பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் பெற்றோரில் ஒருவா் அல்லது இருவரையும் இழந்துள்ள குழந்தைகள்,  தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விண்ணப்பிப்பது கூட அவர்களுக்கு கடினம். இத னால் கொரோனாவால் தாய், தந்தை இருவரை யும் இழந்த சிறார்கள், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறார்கள் ஆகியோரை அணுகி மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.