லக்னோ, பிப்.8- உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அயோத்தி தொகுதியில் போட்டி யிடுவார் என்று தகவல்கள் வெளி யாகி வந்தன. ஆனால், அவர் கோரக்பூர் நகர்ப்புற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட் டார். அயோத்தியில் பாஜக-வுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதால், சொந்த தொகுதியான கோரக் பூரை நம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில், ஆதித்யநாத் திற்கு எதிராக, முன்னாள் பாஜக தலைவர் உபேந்திர தத் சுக்லா வின் மனைவி சபாவதியை, சமாஜ்வாதி கட்சி தனது வேட்பா ளராக நிறுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கை யை துவங்கிய உபேந்திர தத் சுக்லா, 40 ஆண்டுகள் பாஜகவிற் காக உழைத்தவர். பிராமணரான அவர், கோரக்பூர் பிராந்திய பாஜக தலைவராகவும், பாஜக மாநிலத் துணைத்தலைவராக வும் இருந்தவர். உ.பி. முதல்வ ராக ஆதித்யநாத் பொறுப்பேற் றுக் கொண்டதைத் தொடர்ந்து, கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியான போது 2018-ஆம் ஆண்டு பாஜக வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆனால், சமாஜ் வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளரிடம் தோல்வியை தழு வினார். அவரது மனைவியைத் தான் சமாஜ்வாதி கட்சி, தற்போது ஆதித்யநாத்திற்கு எதிராக வேட் பாளர் ஆக்கியுள்ளது. இதனால் கோரக்பூரில் ஆதித்யநாத்திற்கு போட்டி கடு மையாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பகு ஜன் சமாஜ் கட்சி, இங்கு குவாஜா சம்சுதீனை ஆதித்யநாத்திற்கு எதிராக இறக்கியுள்ளது.