states

img

“ஆர்எஸ்எஸ் - இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” நூல் வெளியீடு

இந்தியாவின் பிரபல வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஜி.நூரனி எழுதிய “ஆர்எஸ்எஸ் - இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” எனும் நூலை, மார்க்சிய ஆய்வாளரும், பிரண்ட் லைன் ஏட்டின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜய்சங்கர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி வெளியிட வழக்கறிஞர் சுப்பிரமணி, கு.ராமகிருட்டிணன், யு.கே.சிவஞானம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்  சி.பத்மநாபன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ( விரிவான செய்தி : 8)