states

img

கிரிப்டோ கரன்சியை தடை செய்ய வேண்டும் நிதி சார்ந்த விஷயமல்ல; அது ஒரு சூதாட்டம்!

புதுதில்லி, ஜன. 14 - “நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் முற்றி லும் ஊகங்களின் அடிப்படையிலானது மற்றும் சூதாட்டத்தைப் போன்றது என்பதால் அதை தடை செய்ய வேண்டும்” என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறி யுள்ளார். ‘பிசினஸ் டுடே - வங்கி மற்றும் பொருளா தார உச்சிமாநாட்டின்’ அமர்வில் பங்கேற்று,  சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். அப்போது  இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது: “ஒவ்வொரு சொத்துக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் சில அடிப்படை மதிப்பு இருக்க  வேண்டும். ஆனால் கிரிப்டோ விஷயத்தில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதற்கு ஒரு துலிப் மலர் அளவுக்குக் கூட மதிப்பு  இல்லை. கிரிப்டோக்களின் விலை அதிகரிப்பது என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. எந்த அடிப்படையும் இல்லாமல், ஒன்றின் விலை முழுமையாக நம்பிக்கை அடிப்  படையில் ஏறுவதும் இறங்குவதும் சூதாட் டம்தான். 

நமது நாட்டில் சூதாட்டத்தை நாங்கள் அனு மதிக்கவில்லை. நீங்கள் நமது நாட்டில் சூதாட்  டத்தை அனுமதிக்க விரும்பினால், அதை  (கிரிப்டோ) சூதாட்டமாகக் கருதி, சூதாட்டத்  திற்கான விதிகளைத்தான் வகுக்க வேண்டி யது இருக்கும். எனவே, தெளிவாகச் சொல்கி றேன் கிரிப்டோ ஒரு நிதி சார்ந்த விஷயம் இல்லை. அதைச் சொத்தாகக் கருதுவதும் மிகவும் தவறான ஒரு விஷயம்.  கிரிப்டோக்களை சட்டப்பூர்வமாக்குவது பொருளாதாரத்தில் அதிக டாலர் மயமாக்க லுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான கிரிப்டோக்கள் டாலர் மதிப்புடையவை என்பதால், கிரிப்டோவை வளர அனுமதித்தால் அது டாலர் மயமாக்கலுக்கே வழிவகுக்கும். ஒரு பொருளாதாரத்தில் 20 சதவிகித பரி வர்த்தனைகள் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் கிரிப்டோக்கள் மூலம் நடை பெறுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ரிசர்வ் வங்கி அந்த 20 சதவிகித பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும். நிதிக் கொள்கை மற்றும் பணப் புழக்க நிலைகளை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் திறனும் பாதிக்கப்படும். அது டாலர் மயமாக்கலுக்குத் தான் வழிவகுக்கும்.  இது வெற்று எச்சரிக்கை அல்ல. ஓராண்  டுக்கு முன்பு இருந்தே இந்த முழு விஷயமும் விரைவில் சரிந்துவிடும் என்று தொடர்ந்து கூறி  வந்தோம். கடந்த ஓராண்டாக நடப்பதைப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து இருக்கும். கிரிப்டோவுக்கும், டிஜிட்டல் முறைக்கு நாம் மாறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நமக்குப் பாதிப்புகள் இல்லை. ஆனால், பெரிய டெக்  நிறுவனங்கள் உள்ளே வரும்போது டேட்டா பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுகின்றன. இதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும்.” இவ்வாறு சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார்.