states

img

பாஜக தலைவரின் பண்ணையில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்முறை

ஷில்லாங், ஜுலை 24- சிறுமிகள் உள்ளிட்ட பெண் களை பயன்படுத்தி பாலியல் வக்கிர மையம் நடத்திய பாஜகவின் மேகா லயா மேற்கு மண்டல தலைவர் பெர்னார்ட் என் மரக் என்கிற ரிம்பு தலைமறைவாக உள்ளார். மேற்கு கரோ மாவட்டத்தில் உள்ள துரா  என்ற இடத்தில் ரிம்புக்கு சொந்த மான பண்ணை வீட்டில் (ரிசார்ட்) காவல்துறையினர் சோதனை நடத்தி  ஆறு சிறுமிகளை மீட்டனர். இந்த சம்பவத்தில் 73 பேர் கைது செய்யப்  பட்டனர். தனது மகளை காணவில்லை என சிறுமியின் தாய் அளித்த புகா ரின் பேரில் ரிசார்ட்டில் சோதனை  நடத்தப்பட்டது. வெள்ளியன்று (ஜுலை 22) மாலை முதல் சனிக் கிழமை பிற்பகல் வரை இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. ரிசார்ட்டில் உள்ள அறைகளில்  சிறுமிகள் பூட்டி வைக்கப்பட்டிருந்த னர். இந்த சோதனையில் 400 மது பாட்டில்கள் மற்றும் பயன்படுத்தப் படாத சுமார் 500 ஆணுறைகள் கண்டு  பிடிக்கப்பட்டதாக எஸ்பி கூறினார். காரோ ஹில் தன்னாட்சி மாவட்ட  கவுன்சிலின் மக்கள் பிரதிநிதி ரிம்பு.  முதல்வர் கான்ராட் சங்மா தன்னை  வேட்டையாடுவதாகவும், தான்  தலைமறைவாகவில்லை என்றும்,  காவல்துறையினரின் விசார ணைக்கு ஒத்துழைப்பதாகவும் ரிம்பு கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு  பதிலளிக்க பாஜக முன்வரவில்லை.  பாஜகவை உள்ளடக்கிய கூட் டணி ஆட்சி மேகாலயாவில் உள்ளது.