states

img

ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றினார் ராகுல் காந்தி

ஸ்ரீநகர்,ஜன.29- இந்திய ஒற்றுமை யாத்தி ரையின் போது ஜனவரி 29 ஞாயிறன்று காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., தேசியக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்ட த்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை  (பாரத் ஜோடோ யாத்திரை )என்ற பெயரில் பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், தில்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் வழியாகச் சென்று, தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 145 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை  நடந்து கடந்த ராகுல்காந்தி யின் யாத்திரை . காஷ்மீ ரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்  - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மை தானத்தில்  ஞாயிறன்று மதியம் 12 மணிக்கு நடை பெற்ற பிரம்மாண்ட கூட்டத்துடன் நிறை வடைந்தது. இந்நிலையில் ஜனவரி 29 அன்று யாத்திரை யின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள  லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டரில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறை வேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடை யும், அன்பு எப்போதும் வெற்றிபெறும். இந்தி யாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.