சண்டிகர், பிப்.16- விவசாயிகளின் போராட்டத்தின் போது, தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேர ணியில் செங்கோட்டையை நோக்கி விவ சாயிகள் முன்னேறினர். செங்கோட்டையில் இருந்த கம்பத்தில் விவசாயிகள் கொடி ஏற்றி யதில் சர்ச்சையாகி பாதுகாப்புப் படை யினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் உடன் இருந்து விவசாயி களை தூண்டிவிட்டதாக பஞ்சாப் மாநி லத்தைச் சேர்ந்த நடிகர் தீப் சித்து 2 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். போராட்டக் களத்தில் தீப் சித்து இருந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் பரவி நாடு முழுவதும்பேசப்பட்டது. இந்த நிலையில் இவர் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. தில்லி அருகே குண்ட்லி-மனேசர் நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது, விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட தீப் சித்து உயிரிழ ந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள் ளது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீப் சித்துவின் மறைவிற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.