புதுதில்லி, ஏப். 15 - 2022 மார்ச் மாதத்தில் பய ணியர் வாகன விற்பனை, 4.87 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2 லட்சத்து 85 ஆயிரத்து 240 என்ற எண்ணிக் கையில் இருந்த பயணியர் வாகன விற்பனை, தற்போ து 2 லட்சத்து 71 ஆயிரத்து 358 ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில் இரு சக்கர வாகன விற்பனையும், 4.02 சதவிகிதம் சரிவடைந் துள்ளது. முன்பு 12 லட்சத்து 6 ஆயிரத்து 191 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனை, 11 லட்சத்து 57 ஆயிரத்து 681 ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில் வர்த்தக வாகன விற்பனை, 14.91 சத விகிதம் உயர்ந்து 67 ஆயி ரத்து 828 என்ற எண்ணிக்கை யிலிருந்து, 77 ஆயிரத்து 938 என்ற எண்ணிக்கைக்கு அதி கரித்து உள்ளது.
அதுபோல மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும், இதே காலத்தில், 26.61 சதவிகிதம் ஏற்றம் கண்டு, 38 ஆயிரத்து 135 என்ற எண்ணிக்கையிலிருந்து 48 ஆயிரத்து 284 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்து ள்ளது. எனினும், இந்தக் காலத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை, 2.87 சத விகிதம் குறைந்து 16 லட்சத்து 66 ஆயிரத்து 996-இல் இருந்து, 16 லட்சத்து 19 ஆயி ரத்து 181 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன விற்பனை யில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.