states

img

அதானி மீதான லஞ்சப் புகாரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்!

புதுதில்லி திங்கள்கிழமை நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. டிசம்பர் 20 வரை நடைபெறும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள  முதன்மைக் குழு அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒன்றிய அமைச்சர் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் அரசு சார்பில் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் எம்பிக் கள் பிரமோத் திவாரி, ஜெயராம் ரமேஷ், சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராம்கோபால், திமுக எம்.பி., திருச்சி சிவா, மதிமுக பொ துச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வக்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை இந்த குளி;ர் கால கூட்டத் தொடரில் பரிசீலிக்க அரசு பட்டியலிட்டுள்ளது. அதே போல அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியு டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவ தாகவும், வட இந்தியாவில் கடுமையான காற்று மாசுபாடு, மணிப்பூர் நிலைமை, ரயில் விபத்து போன்றவற்றை விவா திக்க வலியுறுத்துவோம் என எதிர்க் கட்சிகள் கூறியதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.