காஷ்மீரில் அமைதிக்காக இடதுசாரிகள் மட்டுமே பாடுபடுகிறார்கள்
இந்திய மாணவர் சங்க மாநாட்டில் அகிப் யூசுப் பேட்டி
இந்திய மாணவர் சங்கத்தின் 18ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக் கிழமை அன்று தொடங்கியது. ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதிநிதி அமர்வை பத்திரிகையாளர் சசி குமார் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் இருந்து வந்துள்ள அகிப் யூசுப், காஷ்மீரின் அரசியலைப் பற்றி தேசாபிமானி மலையாள நாளி தழின் செய்தியாளர் ஹர்ஷத் மாலி யக்கல்லிடம் விவரித்தார். அதில், சொர்க்கம் உண்டு என் றால் அது காஷ்மீர் என்று கவிஞர்கள் புகழ்ந்தனர். ஆனால் காஷ்மீரி களின் சொந்த நிலத்தில் வசிப்ப வர்களின் வாழ்க்கை சொர்க்கம் அல்ல. பயங்கரவாத தாக்குதல்களி லிருந்தும், அதை தொடர்ந்து வருகை தரும் அரசு பயங்கரவா தத்திலிருந்தும் தப்பிப்பிழைத்து அவர்களின் வாழ்க்கை நகர்கிறது. அரசியல் என்பது அவர்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கான வாழ்நாள் போராட்டமாகும். பஹல்காமிற்குப் பிறகு காஷ் மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீருக்கு மிகப் பெரிய நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வந்துள்ளது. சுயாட்சி யை பறிக்கும் கட்டத்தில், பயங்கர வாதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் என்று ஒன் றிய அரசு கூறியது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் அந்த வார்த்தைகளின் வெற்றுத்தன்மை அம்பலமானது. பயங்கரவாதி களுக்கு உள்ளூர் உதவி கிடைத்த தாகக் கூறி காஷ்மீரிகள் வேட்டை யாடப்படும் சூழ்நிலை இன்னும் உள் ளது. அத்தகைய அரசு பயங்கர வாதத்திற்கு பதிலளிக்க கூட சாத்தி யமில்லை. பதிலளிப்பவர்களை பயங்கர வாதிகளுடன் இருப்பதாக சித்தரித்து அவர்களை அடக்கும் முயற்சி நடக்கிறது. காஷ்மீரில் மாணவர் வாழ்க்கை மாணவர்கள் அனுபவிக்கும் உளவியல் அழுத்தம் மிகப்பெரி யது. எந்த நேரத்திலும் தாக்கப்பட லாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இராணுவ முகாம்களாக மாற்றப் படும் பள்ளிகளில் உள்ள குழந்தை களின் மனநிலை விவரிக்க முடியா தது. இதனுடன், ஒன்றிய அரசு கல்வித் துறையை வகுப்புவாதமய மாக்கவும் புதிய கல்விக் கொள்கை களை திணிக்கவும் முயற்சிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் மாணவர் இயக் கம் இதற்கெல்லாம் எதிராகப் போராடி வருகிறது. குறிப்பாக தெற்கு காஷ்மீரில் குல்காமை மையமாகக் கொண்ட ஒரு பெரிய இயக்கத்தை இடதுசாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஏழை மக்களுக்காகப் பேசுகிறார்கள். இடதுசாரிகள் ஏழைகளுக்காகப் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்த வலதுசாரி சக்திகள், பெரிய அளவி லான தாக்குதலை நடத்துகின்றன. கடந்த தேர்தலில், குல்காமில் இடதுசாரி வேட்பாளர் யூசுப் தாரி காமியை எதிர்த்து ஜமாத்-இ-இஸ் லாமி போட்டியிட்டது. இடதுசாரி களுக்கு எதிராக செயல்பட பாஜக வும் ஒன்றிய அரசும் தங்கள் அனைத்து ஆதரவையும் உறுதி செய்தன. சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை வகுப்புவாத கூட்டணிகளை எதிர்ப்பதன் மூலம் இடதுசாரிகள் காஷ்மீரில் மக்கள் ஆதரவு பெற்று முன்னேறி வரு கின்றனர்” என அவர் உறுதிப்படுத்தி னார்.