states

img

தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளம்

தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு  ஒரு மாத சம்பளம்

தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளம் அளிப்ப தாக தெலுங்கானா முதலமைச் சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி விப்பில்,” முதலில் ஒரு இந்தியராக, பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும், மக்களையும் பாது காக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஆயுதப்படைகளின் முயற்சிகளுக்காக தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளத்தை எனது பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். எனது அனைத்து சகாக்கள் மற்றும் கட்சி சகாக்கள், அதேபோல் நல்ல குடிமக்களும் இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது வெற்றியின் மிக தீர்க்கமான தருணம் வரை நாம் அனை வரும் ஒன்றாக, நமது படைகளுடன் ஒன்றாக நிற்போம்” என அவர் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கி ரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.