states

img

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும்!

நமது நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்ட டம், குடியரசுத் தலைவர் மூலமே திறந்து வைக்  கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலை வர்கள் மத்தியில் கோரிக்கை வலுக்க ஆரம் பித்துள்ளது.  முதலாவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தக் கோரிக்கையை எழுப்பினார். “மூன்றாண்டுகளுக்கு முன்பு, புதிய நாடா ளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்ச்சிக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படாமல் புறக்க ணிக்கப்பட்டார். இது குடியரசுத் தலைவரின் அரசியலமைப்புச் சட்டப்படியான பங்களிப்பை நிராகரிப்பதாகும். எனவே, இப்போதாவது, நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். அப்போது, “இது ஏன் நடக்கிறது?. நாடு  முன்னேறும் போது, சுப காலங்களில் கெட்ட சகு னமாக அவர் (ராகுல் காந்தி) வருகிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஜனநாயகத்தின் கோயிலாக மாறும் வரலாற்று சிறப்புமிக்க தரு ணத்தை அவரால் (ராகுலால்) வரவேற்க முடி யாது என்ற சிறிய சிந்தனை அவருக்கு உள்ளது.  நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஏற்படும் போதெல்லாம் ராகுல் காந்தி மார்பில் அடிக்க தொடங்கி விடுகிறார்” என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா ராகுல்  காந்தி மீது பாய்ந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி மட்டுமன்றி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிவசேனா, ஒவைசியின் மஜ்லிஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா அளித்த  பேட்டியில், “நாடாளுமன்ற புதிய கட்டடத்தை  குடியரசுத்தலைவர் திறந்து வைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவேன்” என்று அதிரடியாக கூறினார். மேலும், “காந்தி யும் சாவர்க்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடி யாது; அம்பேத்கரும் கோல்வாக்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடியாது” என்றும் ஆவே சத்துடன் குறிப்பிட்டார். “நாட்டின் நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபு” என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா  கூறினார்.

“அரசியல் சாசன விழுமியங்களையும் மரபு களையும் மீறக் கூடியவராக பிரதமர் மோடி இருக்கிறார். நாட்டின் குடியரசுத் தலைவர்தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலும் வலியுறுத்தினார். “குடியரசுத் தலைவரே நாடா ளுமன்றத்தின் தலைவர். இரு அவைகளையும் உள்ளடக்கியதாக நாடாளுமன்றம் உள்ளது”  என்பதை 79-ஆவது சட்டப்பிரிவு தெளிவுபடுத்து கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்  சர்மா எடுத்துரைத்தார். ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித்  தலைவருமான அசாதுதீன் ஓவைசி டுவிட்டரில்  வெளியிட்ட பதிவில், “பிரதமர் ஏன் நாடாளுமன்ற  கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும்?. அவர் நிர்வாகத்தின் தலைவர், நாடாளுமன்றத்தின் தலைவர் அல்ல. நம்மிடம் அதிகாரங்கள் பிரிக்  கப்பட்டுள்ளன. மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் நாடாளு மன்ற கட்டடத்தை திறந்து வைக்கலாம். இது மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டது, ஆனால், தனது நண்பர்களின் தனிப்பட்ட நிதி யில் இருந்து ஸ்பான்சர் செய்து கட்டப்பட்டது போல பிரதமர் ஏன் நடந்து கொள்கிறார்?” என்று  கேள்வி எழுப்பினார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “அதி காரம் கண்ணை மறைத்திருப்பதால், அரசி யலமைப்பு ஒழுக்கக்கேட்டின் ஊற்றுக்கண் ணாக பாஜக மாறியுள்ளது. மாண்புமிகு குடி யரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தின் தலை வர். பிரதமர் என்பவர் அரசாங்கத்தின் தலை வர்தான். எனவே, புதிய நாடாளுமன்றத் தொடக்க விழாவை நெறிமுறையின்படி குடியர சுத் தலைவர்தான் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த பாஜக ஒன்றிய  அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஒன்றுமே  இல்லாத விஷயங்களைப் பிரச்சனையாக்கு வது காங்கிரசின் பழக்கம். குடியரசுத் தலை வர் நாட்டின் தலைவராக இருக்கும் நிலையில்,  பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருக்கி றார். அரசாங்கத்தின் சார்பில் நாடாளு மன்றத்தை வழிநடத்துகிறார். அரசாங்கத்தின் கொள்கைகள் அங்கு சட்டமாக்கப்படுகின்றன. குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர் கிடையாது. ஆனால், பிரதமர் இரு அவைகளிலும் உறுப்பின ராக இருக்கிறார்” என்று சமாளித்திருந்தார். டுவிட்டர் பதிவு வழியாக பதிவு ஒன்றை  வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி,  இந்திய அரசியலமைப்புப் பிரிவு 79-ஐ மேற்  கோள் காட்டி, “ஒரு ஒன்றியத்திற்கு நாடாளு மன்றம் கட்டாயம் இருக்க வேண்டும், அது குடி யரசுத் தலைவரையும், இரண்டு அவைகளை யும் கொண்டிருக்க வேண்டும். அவை முறையே  மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று அறியப்படும். ஒன்றிய அமைச்சர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் கவனமாக படிக்க  வேண்டும்” என்று ஹர்தீப் சிங் பூரிக்கு பதிலடி  கொடுத்திருந்தார். 

இந்நிலையில், மீண்டும் இவ்விவகாரத்தை கிளப்பிய காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மோடி அரசு தொடர்ந்து  அரசியல் சாசன உரிமைகளுக்கு மதிப்ப ளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலு வலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும்  ஒன்றாக, பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியில்  மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் காரணங்களுக் காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூ கங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலை வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது. இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பா கும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதி நிதித்துவம் செய்கிறார். அவரே இந்தியாவின் முதல் குடிமகன். புதிய நாடாளுமன்றக் கட்ட டத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜன நாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள்  ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்” என்று சுட்டிக்காட்டினார். இதனை, “கார்கே சொல்வது சரியே. அரசியல் சாசனப் பிரிவு 60 மற்றும் 111 குடியரசுத்  தலைவரே நாடாளுமன்றத்தின் தலைவர் என்பதை தெளிவாக விளக்குகிறது. புதிய நாடா ளுமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிய போதே அதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது வினோதமாக இருந்தது. இதுபற்றி (அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று)  அவருக்கு புரியாது. எனவே, நாடாளு மன்றத்தை குடியரசுத்தலைவர்தான் திறந்து வைக்கவேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் ஆதரித்துள்ளார். ஆனால், “நல்ல காரியம் நடைபெறும்போது காங்கிரஸ் தலைவர்கள் மலிவான அரசியலில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புக்காக நாடே பெரு மையடையும்போது காங்கிரஸ் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலோனி கூறி யுள்ளார்.