புதுதில்லி, ஜூலை 20- மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவ றினால் உச்ச நீதிமன்றம் தலை யிடும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூரில் இரண்டு மாதங் களுக்கு முன்பு, பழங்குடியின பெண்கள் இருவர், நிர்வாண மாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மேற்கண்ட எச்ச ரிக்கையை விடுத்துள்ளது. வியாழனன்று மணிப்பூர் கொடுமை குறித்துப் பேசிய டி.ஒய். சந்திரசூட், “இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வகுப்புவாத கலவரம் நடக்கும் பகுதியில் பெண்களை வன்முறைக்கான கருவிகளாக பயன் படுத்தியிருக்கிறார்கள். அரசியலமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததற்கு இதுவே சாட்சி. வெளிவரும் காணொலிகளால் நாங்கள் (உச்ச நீதிமன்றம்) மிகவும் கவலையடைந்துள்ளோம்.
அரசு செயல்படவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என அதிரடி யாக தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய - மாநில அரசுகளுக்கும் தலைமை நீதிபதி உத்தர விட்டார். “இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். வன்முறையின் கருவிகளாக பெண்களை பயன்படுத்தி யிருப்பது அரசியலமைப்பு மீறல். மனித உரிமை மீறல். அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறி னார். விசாரணையின்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள் ளதாக விளக்கம் அளித்த அவர், “இதுபோன்ற சம்ப வங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குற்ற வாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன் முடிவு நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும்” என்றார். அதைத்தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசா ரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்துள்ளது.