states

மாநிலங்களுக்கான அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்தியது மோடி அரசு!

புதுதில்லி, ஜூன் 16 - இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமை இனிமேல் மாநி லங்களுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில், மக்களுக்கு உணவுப் பொருட்கள்  இலவசமாக வழங்கப்படுவதைத் தடுப்பதற் காகவே, இப்படியொரு முடிவை மோடி அரசு எடுத்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு மாதம்தோறும் 80 கோடி  மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கி வருகின்றது. ஆனால், தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ரேசனில் இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானி யங்களை வழங்கி வருகின்றன. இந்த இலவசத் திட்டங்களுக்கான தானியத்தை ஒன்றிய  அரசின் தொகுப்பிலிருந்தே மாநில அர சுகள் விலைக்கு வாங்கி, வழங்கி வரு கின்றன. இவ்வாறு மாநிலங்களுக்கு விநி யோகிக்கப்படும் அரிசி, கோதுமையைத்தான் ஜூன் 13-ஆம் தேதியுடன் ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது.  வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடரை சந்திக்கும் மாநிலங்களை தவிர பிற மாநில அரசுகளுக்கு ‘திறந்த சந்தை விற்பனை திட்டத்தின்’ கீழ் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படாது என்று ஒன்றிய உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை என்றும், ஒன்றிய அமைச்சர்களின் நீண்ட நாள் ஆலோசனைக்கு பிறகே ஜூன் 13 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் உள்ள 3 அல்லது 4 மாநிலங்கள் தங்களின் திட்டத்துக்காக அதிக தானியங்களை வாங்குவதால், மொத்த தானி யங்களையும் இந்த மாநிலங்களுக்கு கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், நாடு முழுவதும் விலைவாசியை கட்டுப்படு த்துவது பிரச்சனையாக இருக்கிறது என்றும் ஒன்றிய உணவுத்துறை வட்டாரங்கள், உண்மை  அல்லாத ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், இனிவரும் காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சிக்கலாகி விடுமே என்ற கேள்விக்கு, “எங்களிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச அரிசி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு எப்படி பொறுப்பாக முடியும்?

என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் கேள்வியை முன்வைத்துள்ளன. ஏழைகளுக்கு மாதம்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் திட்டத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு, தேர்தல் வாக்குறுதி யாக அளித்திருந்தது. இத்திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந் தது. இந்நிலையில், மோடி அரசின் தற்போதைய அறிவிப்பால், அந்த திட்டத்தை அமல்ப டுத்தவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். “கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசிற்கு இந்திய உணவுக் கழகம் மூலம் அரிசி விற்கப்படுவதை ஒன்றிய அரசு மறுத்த தால், ஏழைகளுக்கு எதிரான மோடியின் நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது. பாஜக-வுக்கு வாக்களிக்காவிட்டால் கர்நாடகாவுக்கு மோடியின் ஆசிர்வாதம் கிடைக்காது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியதன் அர்த்தம் இதுதானா?” என்று கேட்டுள்ளார். மேலும், “திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழான கோதுமை மற்றும் அரிசி விற்பனையை நிறுத்துமாறு இந்திய உணவுக் கழகத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல, “மாநிலங்களுக்கு அரிசி விற்கக்கூடாது. ஆனால் வணிகர்களுக்கு மட்டும் சந்தை திறக்கப்படுமா?” என்று மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.