states

img

பிரதமர் மோடியின் மேடைக்கு அருகே பயங்கர தீ விபத்து

பிரதமர் மோடியின் மேடைக்கு அருகே பயங்கர தீ விபத்து

ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநில தலைநகர் அமரா வதி மறுகட்டுமான பணிகளுக் கான அடிக்கல் நாட்டு விழா அமராவதி வெலகபூடி பகுதி யில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந் தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு அமராவ திக்காக ரூ.49,000 கோடியில் 74 திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடியின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே பகுதியில் (சுமார் 3 கி.மீ தொலைவில்) பிரபல தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பைப்புகளில் திடீரென தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வ மாக தெரிவிக்கவில்லை. இந்த விபத்தால் உயிரிழப்போ, பொருள் சேதம் குறித்தோ தகவல்கள் இல்லை. இந்த தீ விபத்து பிரதமரின் நிகழ்ச்சிக்கு அருகில் நடந்ததால், அப்பகுதியில் கூடியிருந்த மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வருகை மற்றும் பொதுக்கூட்டத்திற்காக பல்லாயிரக்க ணக்கான மக்கள் கூடியிருந்த நிலை யில், இந்த தீ விபத்து சம்பவம் பெரும் விவாத பொருளாக கிளம்பியுள்ளது.  பிரதமர் கலந்து கொண்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பாதுகாப்பு குறை பாடே காரணம் என்ற விமர்சனம் எழுந் துள்ளது. பிரதமர் அலுவலகமோ, பாஜக கூட்டணி ஆளும் ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து இந்த தீ விபத்து குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.