states

பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை ராகுல் காந்தி வருத்தம்

புதுதில்லி, ஜன.31- கடந்த வாரம், தில்லியின் கஸ்தூரிபா நகரில் இளம் பெண் ஒருவர்  கும்பல் பலாத் காரம் செய்யப்பட்டதுடன், கடுமையாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளி யான நிலையில் தில்லி காவல்துறையினர் பதினொரு பேரை கைது செய்தனர்.  பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சந்தித்த தில்லி மகளிர் ஆணையத் தலை வர் ஸ்வாதி மாலிவால், இது தொடர்பாக நட வடிக்கை எடுக்கவும், மேலும் பலரை கைது செய்யவும் தில்லி காவல்துறையிடம் கோரி க்கை விடுத்துள்ளதாகக் கூறியிருந்தார்.  இந்த நிலையில் இளம் பெண் தாக்கப் படும் வீடியோ குறித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது  ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர் களாகக் கருதுவதில்லை.இந்த வெட்கக் கேடான உண்மை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். 20 வயது பெண் ஒருவர் கொடூர மாக தாக்கப்பட்ட வீடியோ இதை அம்பலப் படுத்துகிறது.சமூகத்தில் குழப்பமான போக்கு, மிகவும் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.