states

img

சோனியா காந்தி மீதான நிர்மலா, கோயல் கருத்துகளை நீக்க வேண்டும்!

புதுதில்லி, ஜூலை 31- ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகி யோர், மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்துக் கூறிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, கடந்த வெள்ளிக் கிழமையன்று (ஜூலை 29) குடியர சுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அந்தக் கடிதத்தில், “மாநிலங் களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் மீது விமர்சன கருத்துக் கள் தெரிவிக்க அனுமதியில்லை. இந்நிலையில், மக்களவை உறுப் பினரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி மீது எம்.பி.க்கள்  நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் விமர்சனங்களை வைத்துள்ளனர். இது 1987 ஏப்ரல்  5-இல் வெங்கட்ராமன் மாநிலங் களவைத் தலைவராக இருந்த போது கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக உள்ளது.

மாநிலங்களவை யில் மக்களவை உறுப்பினர் குறித்து குறிப்பிடுவதும் கருத்து தெரிவிப்பதும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்ட மரபுகளை முற்றி லும் மீறுவதாகும். இந்த அவையின் தலைவர் என்ற முறையில், நன்கு நிறுவப்பட்ட நாடாளுமன்ற மரபுகள்  மற்றும் நடைமுறைகளை கடை பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று குறிப்பிடத் தேவையில்லை. இந்தப் புனிதமான ஷரத்துக்களை மீறியதற்காக, நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், சோனியா காந்தி குறித்து, மாநிலங்களவையில் நிர்மலா சீதா ராமன், பியூஷ் கோயல் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்” என மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி யுள்ளார்.