states

லாரி உரிமையாளர்கள்  வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்கள்  வேலை நிறுத்தம்

 அத்தியாவசியப் பொருள்களுக்கு  தட்டுப்பாடு அபாயம்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏப்ரல் 6ஆம் தேதி, லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் சண் முகப்பா தலைமையில் லாரி உரிமை யாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,”கர்நாடகாவில் 1ஆம் தேதி யில் இருந்தே சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகளுக்கான டயர்கள், பிற உதிரி பாகங்கள் விலை, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இத னால் லாரி உரிமையாளர்கள், டிரைவர் கள், கிளீனர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. அதனால் தான் டீசல் விலை, சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் ; ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அன்று நள்ளிரவு முதல் லாரிகள் கால வரையற்ற போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தனர். இந்த கோரிக் கையை கர்நாடக அரசு பரிசீலிக்க வில்லை.  இந்நிலையில், அறிவித்தது போல வே திங்களன்று நள்ளிரவு முதல் லாரி  உரிமையாளர்களின் வேலை நிறுத்த  போராட்டம் தொடங்கியது. “போக்ஸ் லோவா” கூட்டமைப்பு கர்நாடகாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு என்ற நிலையில், இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 196 லாரி சங்கங்களும் உள்ளன. சுமார் 6 லட்சம் லாரிகள் இயக் கப்படாது என்பதால் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டையும் பாதிக்கும் இந்த லாரி உரிமையாளர் சங்க போராட்டத்தால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி வரும் காய்கறி, பழங்கள் வரத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என கோயம்பேடு (சென்னை), மாட்டுத்தாவணி (மதுரை), மேட்டுப்பாளையம் (கோவை) உள்ளிட்ட சந்தைகளின் வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.