states

img

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்  

டெல்லியில் வரும் ஏப்.1 ஆம் தேதிமுதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப்பெறவும், ஏப்.1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்தார். மேலும் டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500ஆக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  

அதனைதொடர்ந்து இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள், உணவு விடுதிகள் திறந்திருக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. கொரோனா தடுப்பு முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதில் அரசு தீவிரமாக கண்காணிக்கும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.