states

img

“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ மக்கள் சந்திப்பு இயக்கம் பொதுக்கூட்டம்

“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (செப்.5)  சென்னை பெரம்பூர் சத்திய மூர்த்திநகர் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், முன்னாள் எம்பி டி.கே.ரங்க ராஜன், முன்னாள் எம்எல்ஏ அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஏ.பாக்கியம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.கே.மகேந்திரன், க.பீம்ராவ்  உள்ளிட்டோர் பேசினர்.

;