states

img

ரஞ்சிதா உடலுக்கு எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

ரஞ்சிதா உடலுக்கு எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த செவிலியர்

பத்தனம்திட்டா அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மலையாள செவி லியர் ரஞ்சிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச் செயலாளர் எம்.ஏ.பேபி, கேரள அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தி ற்கு கொண்டு வரப்பட்ட ரஞ்சிதாவின் உடலை அமைச்சர்கள் வி.சிவன்குட்டி, ஜி.ஆர்.அனில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மாநிலச் செய லாளர் எம்.வி.கோவிந்தன், காங்கிரஸ் தலைவர் திருவஞ்சூர் ராதாகிருஷ் ணன், பாஜக தலைவர் எஸ்.சுரேஷ் மற்றும் பலர் விமான நிலையத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். விபத்து நடந்த 11 நாட்களுக்குப் பிறகு ரஞ்சிதாவின் உடல் அடையாளம் காணப்பட்டது. இங்கிலாந்தில் செவி லியராக பணியாற்றிய ரஞ்சிதா, அக மதாபாத் விமான விபத்தில் இறந்த ஒரே கேரள மாநிலத்தவர்  ஆவார். தனது புலம்பெயர்தலின் இறுதி மாதங்களை முடிக்க லண்டனுக்குத் திரும்பும் போது ரஞ்சிதா காலமானார். வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஞ்சிதா  வெளிநாடு சென்றார். அவர் குவைத்தி லும் மற்ற இடங்களிலும் பல ஆண்டு களாக வேலை செய்தார். கோழஞ்சேரி மாவட்ட மருத்துவ மனையில் நியமனம் பெற்ற ரஞ்சிதா விடுப்பைப் புதுப்பிக்க லண்டனில் இருந்து வீடு திரும்பியிருந்தார். அவரது வீட்டின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்திருந்தன. ஆகஸ்ட் மாதம் அரசு வேலையில் சேர்ந்து தனது புதிய வீட்டில் வாழ விருந்தபோது ரஞ்சிதாவின் மரணம் நிகழ்ந்தது. செங்கன்னூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ரஞ்சிதா, இணைக்கப்பட்ட விமானம் மூலம் அகமதாபாத்தை அடைந்தார். விமா னம் அகமதாபாத்திலிருந்து லண்டனு க்கு புறப்பட்டது. இதுவே ரஞ்சிதாவின் இறுதிப் பயணமாக அமைந்தது.