புதுதில்லி, மே 27- கேரளத்தின் கடன் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு மீண்டும் குறைத்துள் ளது. எந்த வகையிலும் மாநிலத்தை திணறடிப்பதுதான் ஒன்றிய அரசின் அணுகுமுறை. இது கேரள மக்க ளுக்கு எதிரான சவால் என்றும் அனை வரும் ஒன்று பட்டு போராட்டம் நடத்த வேண்டிய நேரம் இது என்றும் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறினார். கேரளத்தின் கடன் வரம்பில் ரூ. 8000 கோடி வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு பெறக் கூடிய கடன் 15,390 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 23,000 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போதைய நடவடிக்கை பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கிஃப்பி கடன்களின் பெயரில் உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள மாநிலத்தை மேலும் நெருக்க டிக்குள் தள்ளியுள்ளது ஒன்றிய அரசு. கேரளாவுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் சில காலமாக மறுக் கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன. நிதியாண்டின் தொடக்கத்தில், நடப்பு ஆண்டில் ரூ.32,442 கோடி கடன் பெற ஒன்றிய அரசு அனுமதி வழங்கி யது. ஆனால், தற்போது ரூ.15390 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள் ளது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10,000 கோடி குறைவாகும். இது கேரள மக்களுக்கு எதிரான சவால். இதன் பின்னணியில் மாநி லத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட செயல்பாடுகளை முடக்கும் அரசியல் நோக்கமும் உள்ளது. இந்த தவறான செயலுக்கு எதிராக மக்கள் அனை வரும் ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநிலத்தின் நலனைக் காக்க அனைவரும் ஒன்றி ணைந்து போராட்டம் நடத்த வேண் டிய தருணம் இது என அமைச்சர் கூறி னார்.