states

வரைவுத் திட்டம் தயாரிக்கிறது கேரளம்

வரைவுத் திட்டம் தயாரிக்கிறது கேரளம்

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பெரும் பிரச்சாரம்

போதைப்பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சட்டமன்ற கட்டிடத்தில் நடை பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் கூறுகையில்,”இந்த மாதம் 30ஆம் தேதி, நிபுணர்கள், மாணவர்  மற்றும் இளைஞர் அமைப்புகள், திரைப்படம், கலாச்சார மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த அமைப்பு கள், ஆசிரியர் மற்றும் பெற்றோர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்கும். போதைப்பொருள் எதிர்ப்பு செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலை மையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும். போதைப்பொருள் எதிர்ப்பு  விழிப்புணர்வு எல்.பி. (லோயர் பிரைமரி) வகுப்புகளி லிருந்தே தொடங்கப்பட வேண்டும். குழந்தைக ளை விளையாட்டுத் துறைக்கு ஈர்க்கும் வகையில் அதிக திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விடுதிகள் மற்றும் பொது இடங்கள் போதைப் பொருள் இல்லாததாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பரிசோத னையை கடுமையாக்க வேண்டும். காவல்துறை மற்றும் கலால் துறையின் அமலாக்க நடவடிக்கை கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடுவதற்கு உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களின் இருப்பைக் கண்டறிய நவீன உபகரணங்களை வாங்க வேண்டும்.

மோப்ப நாய்களின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும்” என முதலமைச்சர் கூறினார்.