states

பத்திரிகையாளர்களின் டுவிட்டர் பதிவுகளை நீக்கச் சொல்வதில் இந்தியாவுக்கு முதலிடம்

புதுதில்லி, ஜூலை 30- கடந்த 2021ஆம் ஆண்டில் பத்திரி கையாளர்களின் உள்ளடக்கத்தைத் தடுக்க வேண்டும் என்று, வேறு எந்த  நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிக மான கோரிக்கைகளை இந்திய அரசு தங்களுக்கு வைத்ததாகவும் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன், இண்டர்நெட், சமூக வலைதள பயன்பாடு அதிகமாக உள்ளது. பிரதான அச்சு ஊட கங்கள், காட்சி ஊடகங்களுக்கு ஈடாக  சமூக ஊடகங்கள் நிமிடத்திற்கு நிமிடம்  புதிய புதிய தகவல்களையும், செய்தி களை அள்ளிக் கொடுத்துக் கொண்டி ருக்கின்றன. இவற்றில் அவ்வப்போது வதந்திகள் பரப்புவதும் நிகழ்ந்தாலும், ஆட்சியாளர்களுக்கு பயந்து பிரதான ஊடகங்கள் மறைக்கும் பல தகவல்கள், டுவிட்டர், முகநூல் வாயிலாக உலகின் பார்வைக்கு வந்து விடுகின்றன. தில்லி விவசாயிகள் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், லக்கிம்பூர் கெரி யில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப் பட்ட சம்பவம் போன்ற பல நிகழ்வுகள் சமூக வலைத் தளங்கள் மூலமாகவே வெளிச்சம் பெற்றன.

இதனால், டுவிட்டரில் வெளியாகும் செய்திகள், விமர்சனங்களுக்கு கட்டுப் பாடுகளை கொண்டுவந்த மோடி அரசு,  அந்த நிறுவனத்திற்கு பலமுறை நோட்  டீஸ்களையும் அனுப்பி மிரட்டல் விடுத்தது. உலகம் முழுவதும் பத்திரிகையா ளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் 349 கணக்குகளின் உள்ளடக்கத்தை அகற்ற 326 சட்டக் கோரிக்கைகள் வந்த நிலையில், இவற்றில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து மட்டும் 114 கோரிக்கைகள் வந்திருப்பதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக துருக்கி (78), ரஷ்யா (55), மற்றும் பாகிஸ்  தான் (48) ஆகிய நாடுகள் அதிகளவி லான கோரிக்கைகளை அனுப்பியுள்ளன. 2021 ஜனவரி முதல் ஜூன் வரையி லான காலத்திலும், இந்தப் பட்டியலில்  இந்தியாவே முதலிடத்தில் இருந்துள் ளது. அப்போது, உலகளவில் பெறப்பட்ட 231 கோரிக்கைகளில் 89 கோரிக்கை களை இந்தியா முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளின் அடிப்படை யில், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் 17 டுவீட்டுகள் நிறுத்திவைக்கப்பட்டன, ஜனவரிக்கும் ஜூன் மாதத்திற்கும் இடையே 11 டுவீட்டு கள் நிறுத்தப்பட்டன. உயர்மட்ட அரசியல்  பிரமுகரால் வெளியிடப்பட்ட டுவீட்டும் கூட, இந்தியச் சட்டத்திற்கு இணங்க இந்தி யாவில் நிறுத்தப்பட்டது என்று டுவிட்டர் கூறியுள்ளது. அதேபோல டுவிட்டர் பயனர்களின் கணக்குத் தகவல்களை கோருவதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்  டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஏனைய மூன்று நாடுகளாகும். இணையதளத்தில் வெளியாகும் தனிநபர் செய்திகள் மற்றும் செய்தி நிறு வனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதில் மட்டுமன்றி, அவர்களின் பக்கங்களை முடக்கச் சொல்வதிலும் இந்தியாவே முதலிடம் வகிப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து  உள்ளது.