கங்காவதி (கர்நாடகம்), ஜன.5- ஆதீன மடங்களின் பிற்போக்குத் தனத்தை துணிச்சலாக தட்டிக்கேட்ட மாணவி அஞ்சலி, சிபிஎம் கர்நாடக மாநில மாநாட்டில் கவுரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில், ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட பிதார், ராய்ச்சூர், கல்புர்கி, யாத்கிர், கொப்பல், பெல்லாரி மற்றும் விஜயபுரா ஆகிய 7 மாவட்டங்க ளில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 322 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வேகவைத்த முட்டைகளை வழங்கும் திட்டத்தை அம்மாநில பாஜக அரசு அண் மையில் நடைமுறைப்படுத்தியது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப் பழம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. ஆனால், மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கு உடுப்பி ஸ்ரீபெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள், லிங்காயத் மடத் தலை வர் சன்ன பசவானந்த சுவாமிகள், சமண மடத்தின் சீடர் பட்டரக சாருகீர்த்தி சுவாமி கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த னர்.
“உணவு என்பது தனிநபர்களின் விருப்பம், அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கென்று தனி உணவுப் பழக்கம் உள் ளது” என்று தங்களின் பிற்போக்குத் தனத்தை வெளிப்படுத்தினர். அப்போது, “எங்களுக்கு முட்டையும் வேண்டும்; பழமும் வேண்டும். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மா னிக்க நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பி வீதியில் இறங்கிப் போராடியவர் மாணவி அஞ்சலி. கங்காவதி தாலுகா, எம்என்எம் மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவியான அஞ்சலி. எஸ்எப்ஐ கிளை யின் கமிட்டி உறுப்பினர். அவர் மடத்தின் தலைவர்களைப் பார்த்து மேலும் கேட்டார்: “எங்களு டைய பணத்தில் நீங்கள் (மடத் தலைவர் கள்) தின்று கொழுத்தீர்கள் அல்லவா? அந்த பணத்தையெல்லாம் திரும்பக் கொடுங்கள். நாங்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறோம் என்றால் வீட்டில் அந்த அள வுக்கு பட்டினி கிடப்பதால்தான்.
அதையும் தடுப்பீர்கள் என்றால், உங்கள் மடத்திற்கு உள்ளேயே வந்து முட்டையை உண் போம்” என்றும் எச்சரித்தார். மாணவி அஞ்சலி பேசும் வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி, கர்நாடக மாநிலத்தையே திரும்பிப் பார்க்க வைத் தது. மாணவர்களையும் பெற்றோரையும் விழிப்படையச் செய்தது. கர்நாடக அரசு முட்டை வழங்குவதை தொடருவதற்கு அவரது துணிச்சலான பேச்சே காரண மாயிற்று. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில 23-ஆவது மாநாடு கொப்பல் மாவட்டம், கங்காவதியில் கடந்த 3-ஆம் தேதி துவங்கிய நிலையில், அதில், மாணவி அஞ்சலி கவுரவிக்கப்பட்டுள்ளார். கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் பிரகாஷ் காரத் மாணவி அஞ்சலி யை பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் பாராட்டியுள்ளார்.