புதுதில்லி, டிச. 7 - இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் புதனன்று துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளில், குடிய ரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், புதிய மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அவரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். “மாநிலங்களவையின் தலைவரான தன்கர், ஜனநாயக விழுமியங்களை நிலை நாட்டுவார்” என்று நாடாளுமன்றத்தின் சார் பாகவும் நாட்டின் சார்பாகவும் வாழ்த்து தெரி வித்து கொள்வதாக மோடி தெரிவித்தார். “நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத் தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது சிறப்பானது” என்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் பாராட்டி பேசி னார். முன்னதாக, கூட்டத்தொடர் துவங்கு வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமா னது. இதில் அனைத்து கட்சிகளும் கருத் தொற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார். மேலும், இந்த கூட்டத் தொடரில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் படும் என்றும் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட்டத் தொடர் நடைபெறுவது முக்கியமானது என் றும் கூறினார்.
“முதல்முறையாக இந்த கூட்டத் தொட ரில் பங்கேற்கும் புதிய எம்.பிக்கள் மற்றும் இளம் எம்.பிக்கள் ஆகியோருக்கு கூட்டத் தொடரின் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை யும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறி னார். நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில், மகாராஷ்டிரா - கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் கேள்வி எழுப்பிப் பேசினார். “குஜராத் மீனவர்கள் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படும்போது, இலங்கை கடற் படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என்று அழைக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என அழைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மீனவர்களை ஏன் மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் நடத்துகிறீர்கள்?” என திமுக உறுப் பினர்கள் கேள்வி கேட்டனர். தென்னிந்தியா வில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உச்ச நீதிமன்ற அமர்வு களை அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி யின் நிறுவனருமான எச்.டி. தேவகவுடா பேசு கையில், “ஒரு உறுப்பினர் அவையில் 2 முதல் 3 நிமிடங்கள் கூட பேச முடியாத நிலை உள் ளது” என்று தெரிவித்தார். 20 ஆண்டுகளா கவே இந்த கசப்பான அனுபவத்துடன்தான் அவையில் தான் இருப்பதாகவும் தேவகவுடா குறிப்பிட்டார். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் டிசம்பர் 29 வரை 23 நாட்கள் நடைபெறும் என்றா லும், 17 வேலைநாட்களுக்கு மட்டுமே நாடா ளுமன்றம் கூடவுள்ளது. இந்த 17 அமர்வு களில் 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன் றிய பாஜக அரசு திட்டமிடுள்ளது. மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி - ஒத்திவைப்பு, மாநிலங்களவைத் தலைவர் பதவியேற்பு, பிரதமர் மோடியின் பேச்சு என்பதாக, கூட்டத்தொடரின் முதல்நாள் சுமூகமாகவே போனது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள் ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால், வழக்கம்போல இந்தக் கூட்டத்தொடரிலும் அனலடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.