states

img

24 கோடி முஸ்லிம்களை கடலில் வீசுவீர்களா, சீனாவுக்கு அனுப்புவீர்களா.. என்ன செய்வீர்கள்?

பாஜக-வுக்கு  பரூக் அப்துல்லா கண்டனம்

ஸ்ரீநகர், மார்ச் 14 - 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்? கடலில் வீசுவார்களா  அல்லது சீனாவுக்கு அனுப்புவார் களா? என்று நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, தேசிய மாநா ட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டம், ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்றது. பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் எம்.ஒய். தாரிகாமி, மக்கள் ஜன நாயக கட்சியின் அம்ரிக் சிங் ரீன், ஆம்  ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது மற்றும், அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக தில்லி யில் தேர்தல் ஆணையத்தை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத் திற்குப் பின், பரூக் அப்துல்லா செய்தி யாளர்களை சந்தித்துப் பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“மத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த வேண்டாம். 22 முதல் 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்..? கடலில் வீசுவார் களா, அல்லது சீனாவுக்கு அனுப்பு வார்களா..? சமூகங்களை ஒருவருக் கொருவர் எதிரெதிராக நிறுத்தக் கூடாது. பயம் மற்றும் வெறுப்பு அர சியல் புதிதல்ல. காந்திஜி ராமராஜ்யம் பற்றி பேசினார். ராம ராஜ்ஜியம் என்பதன் மூலம் அனைவருக்கும் சம மான வாய்ப்புகளை அனுபவிக்கும் மற்றும் யாருக்கும் பாகுபாடு காட்டாத பொதுநல அரசு என்று அவர் அர்த்தப்படுத்தினார். காந்திஜியின் கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.  ஜம்மு - காஷ்மீரை முழு அளவி லான மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது தேசத்தின் சோகம். எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரு வது மற்றும் மக்களின் ஜனநாயக உரி மைகளைக் காக்க பேரவைத் தோ்தலை முன்கூட்டியே நடத்த தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தேர்தல் ஆணையத்தை சந்திக்க நாங்கள் தில்லிக்கு செல்வோம். தேசிய எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திப்போம். 2024 தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதன்பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.”  இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.