ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வ தற்கான அரசின் அதிகாரப்பூர்வ இணையதள சேவையான ஐஆர்சி டிசி சேவை கடந்த சில நாட்களாக மோச மான அளவில் தள்ளாடி வருகிறது.சர்வர் பிரச்சனை காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் அடிக்கடி முடங்கி வரும் நிலையில், வியாழனன்றும் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது. இத னால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள் ளாகினர். அதன்பின் மீண்டும் சரிசெய் யப்பட்டது. அடிக்கடி ஐஆர்சிடிசி முடங்கி வருவதால் முன்பதிவு சேவை யில் நம்பிக்கை இல்லாமல், பயணிகள் நேரடியாக ரயில்நிலையம் சென்று தங்க ளது பயணச் சீட்டை பதிவு செய்து வரு கின்றனர். கடந்த ஜூலை மாதம் இதே போன்று தொழில்நுட்பக் கோளாறு காரண மாக ஐஆர்சிடிசி பலமணி நேரம் முடங்கி யது என்பது குறிப்பிடத்தக்கது.