states

img

இந்து நண்பர்கள் ஆதரவாகவே உள்ளனர்; நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன்!

மாண்டியா மாவட்டம் பிஇஎஸ் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி, தனது இரு சக் கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அப்போது அந்த மாணவியை சூழ்ந்துகொண்ட சங்-பரிவார் மாணவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சல் போட்டனர். ஆனால், அவர்களுக்கு அஞ்சாத மாணவி முஸ்கான், ஒற்றை ஆளாக ‘அல்லாஹூ அக்பர்’ என்று பதில் முழக்கமிட்டார். அவரது துணிச்சலான இந்த நடவடிக்கை சமூகவலைதளங்களில் வைர லாகின. இந்நிலையில், தான் மிரட்டப் பட்டது குறித்து, முஸ்கான் ‘என்டி டிவி’க்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், “நான் கவலைப் படவில்லை. எனது அசைன் மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூ ரிக்கு வந்தேன். புர்கா அணிந்த               தால் என்னை அவர்கள் அனும திக்கவில்லை. என்னை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் ‘அல்லாஹூ அக்பர்’ கூற ஆரம்பித்தேன்.

அவர்களில் சிலர் விரல்களை உயர்த்தி காட்டிய போது சற்று பயமாக இருந்தது. ஆனால் எனது கல்லூரி முதல்வ ரும், ஊழியர்களும் என்னை பாது காப்பாக அழைத்து சென்றனர். எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். தலையில் அணியும் ஒரு சிறிய துணிக்காக நாங்கள் கல்வி கற் பதை சிலர் பாழாக்குகிறார்கள்” என்று முஸ்கான் தெரிவித்துள்ளார். முஸ்கானை தாக்க முயன்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், “அவ்வாறு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண் டாம்” என்றும் முஸ்கான் அவர் களை மன்னித்துள்ளார்.