லக்னோ, பிப்.2- உத்தரப்பிரதேசத்தில் ஆதித்ய நாத் தலைமையிலான அமைச்ச ரவையில் இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, சுவாமி பிரசாத் மவுரியாவின் மகளும், பாஜக எம்.பி.யுமான சங்கமித்ரா மவுரியா வும் பாஜகவிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “நான் பாஜகவில் இருக்கிறேன், இருப்பேன்” என்று சங்கமித்ரா மவு ரியா அறிவித்தார். இந்நிலையில், சங்கமித்ரா மவு ரியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “பாஜகவில் இருந்து விலக வேண் டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. நான் பாஜகவில் இருக்கிறேன், இருப்பேன். குடும்ப வாழ்க்கை மற் றும் அரசியல் வாழ்க்கை இரண்டும் முற்றிலும் வேறுபட்டது. மாநிலம் முழுவதும் பாஜகவுக்காக பிரச்சா ரம் செய்வேன். ஆனால், கட்சி வேண் டுகோள் விடுத்தாலும், என் தந் தைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய மாட்டேன்” என்று கூறியுள்ளார். “இதுவரை கட்சி என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. கட் சிக்கு எனது விசுவாசத்தைக் காட்ட எந்த சான்றிதழும் நான் கொடுக்க வேண்டியதில்லை. எனது தந்தை சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, பின்தங்கியவர்களை மேம்படுத்து வதற்கான தனது போராட்டத்தை தொடர்கிறார். அதே சித்தாந்தத்தை நான் மரபுரிமையாக பெற்றுள் ளேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இதைச் செய்ய முடியும் என்று நான் நினைக் கிறேன்” என்றும் சங்கமித்ரா மவு ரியா குறிப்பிட்டுள்ளார். சுவாமி பிரசாத் மவுரியா பத் ருணா சட்டப் பேரவை தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டி யிடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.