கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கடந்த பிப்ரவரி மாதம் பஜ்ரங் தள் நிர்வாகி ஹர்ஷா கொலை செய்யப்பட் டார். அப்போது, ‘‘முஸ் லிம் குண்டர்களே ஹர்ஷாவை கொலை செய்துள்ளனர்’’ என்று கூறி மதவன்முறை யைத் தூண்டும் வகையில் கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருந்தார். இதுதொடர்பாக, 2 மாதங்களுக்குப் பிறகு - அதுவும் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு, கர்நாடக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.