கேரளாவில் ஜோடிக்கப்பட்ட கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்; தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012-இல் கோழிக்கோடு மாவட்டம் ஒஞ்சியம் எனும் பகுதி யில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்எம்பி)யின் தலைவரான டி.பி. சந்திரசேகரன் கொலை செய்யப் பட்டார். இக்கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதில் தொடர்பில்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் அன்றைய ஐக் கிய ஜனநாயக முன்னணி அரசின் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில் தற்போது, டி.பி. சந்திரசேகரனை கொலை செய்வ தற்கு ஓர்க்காட்டேரியில் உள்ள புதுக்கடையில் வைத்து சிபிஐ(எம்) தலைவர்களான பி.மோகனன், சி.எச்.அசோகன், கே.சி.ராமச்சந்தி ரன், கே.கே.கிருஷ்ணன் ஆகியோர் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று போலியான விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க வேண்டு மென உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. போலியான விசாரணை அறிக்கை தாக்கல் செய்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக நட வடிக்கை எடுக்க வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறை யீட்டை தள்ளுபடி செய்த கோழிக் கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வழக்கில் பிரதி யாக சேர்க்கப்பட்ட கே.கே.கிருஷ் ணனின் மேல்முறையீட்டின் அடிப்ப டையில் இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. போலி விசாரணை அறிக்கை தயார் செய்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜோஸி செறியான், கொயிலாண்டி காவல்நிலைய தலைமைக் காவ லர் கே.என்.வாசுதேவன், அறிக்கை யில் கையெழுத்திட்ட பிரமோத் ஆகியோருக்கு எதிராக விசாரணை யைத் தொடர்வதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகளின் தண்டனை நடவடிக்கைகளை பாதிக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு தான் போலி விசாரணை அறிக்கை யை தயாரித்துள்ளார்கள் என உயர் நீதிமன்றம் மதிப்பீடு செய்துள்ளது. இவ்வாறு போலி அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறு செய்தது நீதிநிர்வா கத்தைப் பாதித்தது என்றும் நீதிபதி களான ஏ.ஜெயசங்ரன் நம்பியார், கௌஸர் எடப்பகத்து ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தெரி வித்துள்ளது. டி.பி.சந்திரசேகரின் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க் கப்பட்ட நான்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களும் 2012 ஏப்ரல் 2 அன்று ஓர்க்காட்டேரியில் உள்ள பூக்கடையில் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது, காவல்துறை தரப்பு வாதம். கே.சி. ராமச்சந்திரன் மே 16 அன்று மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்டார். 17 இரவு நீதிமன்றம் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தது. ஆனால் அதே நாள் மாலை 5 மணிக்கு நாங்கள் ஒன்றுகூடி சதித்திட்டம் தீட்டிய பூக்கடையைக் காண்பிக்கி றேன் என்று ராமச்சந்திரன் குற் றத்தை ஒப்புக் கொண்டதாக விசா ரணைக்குழு போலி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தி ருந்தது. இந்த அறிக்கை போலி யானது என்றும் அறிக்கையைத் தயார் செய்த காவல்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோழிக்கோடு கூடுதல் விசாரணை நீதிமன்றத்தை அணுகினர். காவல்துறை அதிகாரி கள்மீது நடவடிக்கை எடுக்க அர சின் முன்உத்தரவு தேவை என்ப தைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்ததனால் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது.