states

கர்நாடகத்தில் கலகலக்கிறது பாஜக கூடாரம்

பெங்களூரு, ஏப். 17 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வேட்பாளர் பட்டியலை வெளி யிட்டது முதலே, அம்மாநில பாஜக-வுக்குள் குத்து வெட்டு அரங்கேறி வரு கிறது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக தலைவர்கள் பலரும் தங்களின் எம்.பி. எம்எல்ஏ, எம்எல்சி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். தற்போதைய அமைச்சர்களான எஸ். அங்காரா, ஆனந்த்சிங், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி, முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். ஈஸ்வ ரப்பா, அரவிந்த லிம்பாவளி, எஸ்.ஏ. ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மதல் விருபாக்‌ஷப்பா, எம்.பி. குமார சாமி, சி.எம் நம்பன்னவர், எஸ்.ஏ. ரவிந்திர நாத், நேரு ஹோளேகர், என். லிங்கணா,  சுகுமார் ஷெட்டி, பரமுமுன வள்ளி, களகப்பா பண்டி, கூளிஹட்டி சேகர் பலரும் பாஜக மீது அதிருப்தி அடைந்துள் ளனர். இவர்களில் முன்னாள் துணை முதல்வரும், அத்தாணி தொகுதியில் 3 முறை வெற்றிபெற்றவருமான லட்சுமண் சவதி, ஞாயிற்றுக்கிழமையன்று காங்கிர சில் இணைந்தார். இது கர்நாடக பாஜக- வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால், இந்த அதிர்ச்சி நீங்கு வதற்கு முன்பாகவே, கர்நாடக மாநில பாஜக-வின் மூத்த தலைவரும், முதல்வ ராக இருந்தவருமான ஜெகதீஷ் ஷெட்ட ரும் தற்போது காங்கிரசில் இணைந்து மற்றொரு அதிர்ச்சி அளித்துள்ளார்.

கர்நாடக சபாநாயகரைச் சந்தித்து  தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா  செய்த ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்பள்ளி யிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு சென்றார். அங்கு கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிவசங்கரப்பா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஜெகதீஷ் ஷெட்டர், “முழு மனதுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். டி.கே. சிவக்குமார், சித்தராமையா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எம்.பி.  பாட்டீல் உள்ளிட்ட காங்கிரஸ் தலை வர்கள் என்னைத் தொடர்பு கொண்ட னர். அவர்கள் அழைத்தபோது எவ்வித யோசனையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டேன்” என்று தெரி வித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான  அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பிலிருந்து தனது அர சியல் வாழ்க்கையைத் துவங்கிய ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவின் முக்கிய பிரிவான லிங்காயத் சமூ கத்தைச் சேர்ந்தவர் ஆவார். எதிர்க் கட்சித் தலைவர், 6 முறை எம்எல்ஏ, பல்வேறு காலகட்டங்களில் அமைச்சர் என பதவிகளை வகித்தவர். ஒருமுறை சபாநாயகராகவும் இருந்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடி யூரப்பா மீது நிலக்கரி ஊழல் புகார்  எழுந்தபோது அவர் தனது பதவியை ராஜி னாமா செய்தார். பின்னர் சதானந்த  கவுடா முதல்வராக பதவியேற்று அவ ரும் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கர்நாடகத்தின் 15-ஆவது முதல்வராக 2012 ஜூலை 12 முதல் 2013 மே 12 வரை  முதல்வர் பதவியில் ஜெகதீஷ் ஷெட்டர் இருந்தார். தற்போது காங்கிரசில் இணைந்துள்ள ஷெட்டர், ஹூப்ளி - தார்வாட் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள் பலரை இழந்து கர்நாடக பாஜக இப்போதே கலகலத்து நிற்கிறது.

தனியாளாக வேட்புமனு தாக்கல் செய்த பொம்மை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், கர்நாடக பாஜக-வுக்கு தலைமை தாங்கும் முதல்வர் பசவராஜ் பொம்மை, திங்களன்று ஷிகாகான் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் முக்கியத் தலைவர்கள் யாரும் அவருடன் இல்லை. இதுபற்றி கேட்டபோது, “இன்று தான் தற்காலிகமாகத்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். விரைவில் இரண்டாவது முறை வேட்புமனு தாக்கல் செய்வேன். அப்போது பாஜக முக்கிய தலைவர்கள் என்னுடன் இருப்பார்கள்” என்று சமாளித்துள்ளார்.

 எடியூரப்பா மகன் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவ தாக அறிவித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தனக்குப் பதில் தனது மகன் விஜயேந்திராவை ஷிகாரிபுரா தொகுதியில் களமிறக்கி விட்டுள்ளார். அந்த வகையில், விஜ யேந்திரா, ஷிகாரிபுரா தொகுதி தர்ல கட்டா கிராமத்தில், தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அங்கிருந்த பஞ்சாரா சமூக மக்கள் விஜயேந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தங்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக அரசு குறைத்து விட்டதாக கூறி பஞ்சாரா சமூக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, கடந்த மாதம் எடியூரப்பா வீடு  மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பாஜக எம்.பி., எம்எல்ஏ ராஜினாமா?

பீதர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருந்து வரும் சூர்யகாந்த் நாகமர பள்ளி, சுயேச்சையாக போட்டியிடு வதாக அறிவித்துள்ளார். பாஜக-வில் இருந்தும் விலகியுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து எம்.பி. பத வியை ராஜினாமா செய்ய முடிவெடுத் துள்ளார். இவர் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.