புதுதில்லி, நவ. 4 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படாதது குறித்த கேள்விக்கு, ஒன்றிய பெட் ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித் துள்ளார். “கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், எரி பொருள் விற்பனை நிறுவனங்களுக்கு (OMC) இன்னும் டீசல் விற்பனை யில் நஷ்டம்தான். டீசல் விற்ப னையில் லிட்டருக்கு ரூ.3-4 இழப்பு ஏற்படுகிறது. இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று எரிபொ ருள் சில்லரை விற்பனையா ளர்களும் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 19 ஆயிரம் கோடிக்கு மேல் நிகர இழப்பைச் சந்தித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை உயர்ந்த போது, இந்த நிறுவனங்கள், பணவீக்கத் தைச் சமாளிப்பதற்கு அர சாங்கத்திற்கு உதவும் வகை யில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க வில்லை” என்று குறிப்பிட்டுள் ளார்.