states

‘ஒரு துளி விஷம் என்றாலும் அது விஷம் தான்’

மதுரை, செப்.17- பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர்,  பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் வேதிப் பொருளைக் கொண்டு விநாயகர் சிலை தயாரிப்பதற்கு தடை விதிக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், மனுதாரருக்கு சாதகமாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அளித்திருந்தார்.   இதை எதிர்த்து நெல்லை ஆட்சியரின் மேல்முறை யீட்டு  மனுவை விசாரித்த நீதி பதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி  ஆகியோர்  “பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று, ஏற்கெனவே பசுமை தீர்ப்பாயம் பிறப் பித்த உத்தரவின் அடிப்படை யில் தான் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதி முறைகளை வகுத்துள்ளது.  இரசாயனம் கலந்த சிலை களை நீர் நிலைகளில் கலப்ப தால் புற்றுநோய் அதிக அள வில் ஏற்படுகிறது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிகம் என்பதெல்லாம் இல்லை; எல்லாமே விஷம்  தான். பிளாஸ்டர் ஆப்  பாரிஸ்  மூலம்  செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற் பனை செய்யலாம் என தனி நீதிபதி பிறப்பத்த உத்தர வுக்கு தடை விதிக்கப்படு கிறது” என்றனர்.