மகாராஷ்டிராவில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9,70,25,119. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5,00,22,739. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,69,96,279. மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக் காளர்களின் எண்ணிக்கை 6,101 ஆகும். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதி களுக்கும் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப்பிரதேச அரசு உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதே போல கோவிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
வேற்றுக் கிரகங்களில் மனிதர்களை குடி யேற்றம் செய்வதற்கான சோதனையை இஸ்ரோ தொடங்கியுள்ளது. வேற்றுக் கிரகங்களில் மனிதர்கள் தங்குவதற்கான சோதனைக் குடில்கள் லடாக்கில் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ சோதனையை முடுக்கிவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் விவேக் தேவ்ராய் (69) காலமானார். குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளி யன்று காலை 7 மணிக்கு உயிரிழந்ததாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள தேவிரம்மா மலைக்கோவிலில் தீபாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த னர். 3,000 அடி உயரம் உள்ள மலை மீது அமைந்துள்ள கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கயிறை பிடித்தபடி மலை ஏறினர். தொடர் மழையால் மலையேறும் வழியில் ஈரம் காரண மாக கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலை யில், வழுக்கி விழுந்ததில் 12 பக்தர்கள் காயமடைந்தனர்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெள்ளியன்று முதல் அமலாகி யுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் மாதத்திற்கு 3.75% ஆக அதிகரிக்கப்படுள்ளது. ஒருமாத பில்லிங் காலத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.